ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் பாதுகாப்பு மட்டுமல்லாது உரிமைக் குரலுமாகும். சிறிய கட்சிகளை உருவாக்கி நாங்கள்தான் தேசிய தலைவர்கள் என்று இன்று சொல்லிக் கொள்பவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
நாவிதன்வெளியில் இடம்பெற்ற தேர்தல் பிராசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தைரியமாகவும் துணிச்சலாகவும் கையாளும் சக்தி எங்களுடைய முஸ்லிம் காங்கிரஸிக்கு மட்டும்தான் உள்ளது. வாக்கு பலத்தினை அதிகரிப்பதன் ஊடாக முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும். தேசிய தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்து மக்களின் வாக்குகளை சிதறடித்த பலர் இன்று முகவரியில்லாமல் குறிப்பாக பயந்த கொண்டு தேர்தல் பிரசாரம் செய்யுமளவுக்கு பின்னடைவை சந்தித்து வருவதை எம்மால் காணக்ககூடியதாகவுள்ளது.
இவ்வாறான நிலை மாற்றியமைக்கப்பட்டு முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தியைக் கொண்ட கட்சிக்கு ஒருமித்து வாக்களித்து முஸ்லிகளின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment