15 Dec 2025

சொல்லின் செல்வர், அமரர் கலாநிதி செல்லையா இராசதுரை அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்.

SHARE

சொல்லின் செல்வர், அமரர் கலாநிதி செல்லையா இராசதுரை அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்.

மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என போற்றப்படும் சொல்லின் செல்வர் அமரர் கலாநிதி செல்லையா இராசதுரையின் நினைவஞ்சலி கூட்டம் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(14.12.2025) நடைபெற்றது. 

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நாகலிங்கம் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னதாக கட்சி கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டு. அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகை சுடர் ஏற்றுலுடன் மலர்  அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என போற்றப்படும் சொல்லின் செல்வர் அமரர் கலாநிதி செல்லையா இராசதுரை அவர்கள் ஆற்றிய சேவைகள் தொடர்பில் நினைவுரைகள் இடம்பெற்றன.

இதன்போது த.ம.பு கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமரர் செல்லையா இராஜதுரை அவர்கள்  2025.12.07 அன்று சென்னை மாநகரில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 






































SHARE

Author: verified_user

0 Comments: