7 Nov 2025

ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுததப்படும் பாத்தியமியன்ஸ் அதி உயர் விருது-2025

SHARE

ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய வரலாற்றில்  முதன்முறையாக அறிமுகப்படுததப்படும் பாத்தியமியன்ஸ் அதி உயர் விருது-2025

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் .பொ. உயர்தரம்  கற்று பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் .பொ. சாதாரண தரம் கற்று சகல பாடங்களிலும் அதி உயர் சித்தியை பெற்ற  மாணவர்களுக்குமான பாத்திமியன்ஸ் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விருது வழங்கும் நிகழ்வு இப்பாடசாலையின் அதிபர் .எல்.அஸ்கர் தலைமையில் புதன்கிழமை(05.11.2025) நடைபெற்றது. 

கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் எச்.எம்.ஜே நசீபா, தென்கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் விரிவுரையாளர் நுஸ்கியா ஹஸன், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் முறைசார் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டும் மாணவர்களுக்கு இவ்விருது இப்பாடசாலைச் சமூகத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட விருவதோடு, பாத்தியமியன்ஸ்களில் பதிவுகளை தொடர்ச்சியாக இப்பாடசாலை  ஆவணப்படுத்தியும் வருகின்றது.

இப்பாத்தியமின்ஸ் அதி உயர் விருதினை முதற்தடவையாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களினால மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. 

பாடசாலையின் அதிபர் .எல்.அஸ்கர் இதன்போது தலைமை உரையாற்றுகையில்பாடசாலையின் தேவைகள் குறித்தும் பாடசாலை எதிர்காலத்தில் அடைவிருக்கும் இலக்குகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். 

அதனை தொடர்ந்து உரையாற்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் எதிர்காலத்தில் புதிய கல்வி கொள்கைகளுக்கு அமைவாக பாடசாலை நவீன கல்வி உபகரணங்களுடன் அபிவிருத்தி பாதை ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அரசாங்கம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளது. 

அதனை தொடர்ந்து பிரதம அதிதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின உரையில்கல்வியிலுள்ள மூன்று படித்தரங்களில் அறிவு திறன் மனப்பாங்கு வளர்ச்சியில் மாற்றங்களை கொண்டு வருவதன் ஊடாக பாடசாலை மாணவர்கள் சமூகத்தில் நற்பிரசைகளாக வரமுடியும். இப்பாடசாலை தொடர்பாக கரிசனை கொண்டு எதிர்காலத்தில் கல்வி துறையினரோடு கலந்துரையாடி இப்பாடசாலையிலுள்ள விடயங்களை பூர்த்தி செய்வதற்கு தன்னால் முடியுமான உதவிகளை செய்வேன் என்று குறிப்பிட்டார்.


















SHARE

Author: verified_user

0 Comments: