22 Oct 2025

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத பூஜை வழிபாடுகள் ஆரம்பம்.

SHARE

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத பூஜை வழிபாடுகள் ஆரம்பம்.

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் புதன்கிழமை(22.10.2025) பக்திபூர்வமாக ஆரம்பமானது. 

தமிழ் கடவுள் முருகப்பெருமான்  சூரபத்மனை வதம் செய்த இதிகாச கதைகளுடன் தொடர்புடையதாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் முக்கிய விரதமாக கந்தசஷ்டி விரதம் காணப்படுகிறது. 

விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு சங்கர்ப்பம் செய்யப்பட்டு தர்ப்பை வழங்கப்பட்டன. 

இப்பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சிவகரன் குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றன. 

ஆலயத்தில் தொடர்ந்து ஆறுநாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்கார நிகழ்வு முறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: