உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற 360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில் வழங்கிவைப்பு
2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு
ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களை சபாநாயகர் வைத்தியகலாநிதி கௌரவ ஜகத் விக்கிரமரத்ன ஞாயிறுற்றுகிழமை (2707.2025) வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 36 மில்லியன் ரூபா நிதியிலான பணப் பரிசிக்கள் இதன் போோது வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment