செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த
இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி திங்கட்கிழமை(03.03.2025) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சி.சிறிதரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது சேரன், சோழன், பாண்டியன், என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் ஆரம்பப் பிரிவு மாணவர்களினதும், இடைநிலைபிரிவு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சிகள், நிகழ்வை அலங்கரித்தன. மாணவர்களின் அணிநடை மற்றும் ஏனைய விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மேலும் பட்டிருப்பு கல்வி வலயத்தின்
பிரதி கல்வி பணிப்பாளர்களான திவிதரன், பணிப்பாளர் ஜீவானந்தராசா, வைஷ்ணவி, செட்டிபாளையம்
வைத்தியசாலையின் வைத்தியர் அற்புதராசா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment