மீண்டும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள
கிரான் பிரதேசம்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை கடற்படையினரின் உதவியுடன் இராணுவமும் இணைந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த காரணமாக கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளன.
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்து சேவை நிலையத்தினால் இராணுவத்தினரின் உதவியுடன் அப்பகுதி மக்களுக்கான போக்குவரத்துகள் தற்போது படகுகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் கிரான்
தொப்பிக்கல கிரான் பாலம் ஊடான பிரதான
போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கடந்த 2025.02.27 ஆம் திகதியிலிருந்து பெய்துவரும் மழை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த சில கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்தினை பிரதேச செயலகமும் இராணுவமும் இணைந்து படகு சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்..
இதே வேளை 2025 கலபோக வேளாண்மை செய்கையும் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை
தெரிவிக்கின்றனர்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment