பெண்கள் அபிவிருத்தி மாவட்ட மீளாய்வுக்
கூட்டம்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது சம்பந்தமாக பெண்கள் அபிவிருத்தி மாவட்ட மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு பழை மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை(21.05.2025) நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது சம்பந்தமாக பெண்கள் அபிவிருத்தி மாவட்ட மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.பிரணவன் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜேஜே.முரளிதரன் இதில் கலந்து கொண்டு மாவட்டத்தில் பெண்களுக்காக முன்னெடுக்கப்படும் நலன்புரி வாழ்வாதாரத் திட்டங்கள் சம்பந்தம் பிரதேச செயலகங்கள் தொகுதிவாரியாக இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
பெண்களின் அபிவிருத்தி வாழ்வாதாரம் உரிமை பாதுகாப்பு மாவட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது சம்பந்தமாக இங்கு ஆராயப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்திற்கு அமைவாக உதவிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி
சுதர்சினி ஸ்ரீகாந்த் மாவட்ட த்திலுள்ள பெண்களுக்கான அபிவிருத்தி திட்டத் உத்தியோகஸ்தர்கள், மற்றும் மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், அரசு
சார்பற்ற நிறுவனங்களின் பெண் பிரதிநிதிகள். என பலரும் இந்த அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment