30 பாடசாலைகளைச் சேர்ந்த 350 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கிராமத்திலிருந்து இயங்கிவரும் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாவட்டத்திலுள்ள மண்முனை மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” எனும் தொணிப் பொருளின்கீழ் அப்பியாசக் கொப்பிகள், உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(28.01.2025) கன்னன்குடா மகாவித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயங்களில் நடைபெற்றன.
சங்கத்தின் தலைவருமான த.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் க.ரகுகரன் மற்றும் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.ஜீவாகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இதன்போது அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள், அவ்வமைப்பின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment