வெள்ளப் பெருக்கில் பாதிப்புற்ற மக்களுக்கு பசுமை இல்லம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிப்புற்ற மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறுவாமுனைக் கிராம மக்களுக்கு பசுமை இல்லம் எனும் தன்னார்வ அமைப்பினார் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இவ்வுதவித்திட்டத்திற்கு பசுமை இல்லம் ஊடாக ஜேர்மனியிலுள்ள பி.சிஎன் இராசன் சிவலிங்கம், கௌரியராஜ் குணா ஆகியோர் நிதி உதவிகளை வழங்கியுள்ளர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது பசுமை இல்லத்தின் வடக்க கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் அருள், மாவட்ட இணைப்பாளர் வசந்தபாபு, உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment