24 May 2024

வெசாக் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட தன்சல நிகழ்வு.

SHARE

வெசாக் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட தன்சல நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு  பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் பௌத்த கொடிகளும், வெசாக்;கூடுகளுடன் அலங்கரிக்கப்பட்டடுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் செல்லும் பயணிகளுக்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் முன்னால் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை(23.05.2024) தன்சல நிகழ்வு இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரயாணிகளுக்கும், ஏனைய பொதுமக்களுக்கும் கடலை வழங்கினர்.














































SHARE

Author: verified_user

0 Comments: