வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பகுதி மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (05) திகதி இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு 2490 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொண்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அக்ஷன் யூனிட்ரி லங்கா நிறுவனத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்ததுடன், குறித்து உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான நிதி உதவியிணை சிறுவர் நிதியம் (ChildFund) அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment