11 Mar 2024

பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் பி.பி.எல்.கிறிக்கட் திருவிழா துடுப்பெடுத்தாடிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.

SHARE

பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் பி.பி.எல்.கிறிக்கட் திருவிழா துடுப்பெடுத்தாடிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் நடாத்திய பி.பி.எல்.கிறிக்கட் திருவிழாவின் இறுத்திப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் ஆர்.கோபாலசிங்கம் தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விளையாட்டுத் திருவிழாவின் இறுதி நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். இதன்போது மேலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண விளையாட்டுத்  திணைக்களத்தின் பணிப்பாளர் .சிவராஜன், மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்திலே துடுப்பெடுத்தாடி விளையாடு நிகழவை ஆரம்பி வைத்தனர்.

இப்போட்டியில் 4 கழகங்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இறுத்திப்போட்டிக்கு கல்லாறு வெங்களோ கிங்ஸ் அணியும் பொட்டுறப்டர் அணியும் பங்கு பற்றி விளையாடினர்.

10 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் பொட்டுறப்டர் அணியினர் 5 விக்கட் இழப்பிற்கு 119 றண்களையும், கல்லாறு வெங்களோ கிங்ஸ் அணி 9.4 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 48 றங்களையும் பெற்றுக் கொண்டனர். 71 மேலதிக ஓட்டங்களால் பொட்டுறப்டர் அணி வெறிபெற்றிருந்தது.

இதில் பங்கு கொண்ட வீரர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கழகத்திற்கு வெற்றிக் கேடயமும், பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




























SHARE

Author: verified_user

0 Comments: