11 Mar 2024

மகளிர் தினத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார முகாமைத்துவச் செயலமர்வு.

SHARE

மகளிர் தினத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார முகாமைத்துவச் செயலமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் மூன்றாவது  நிகழ்வாக மகளிருக்கானமனைப் பொருளாதார முகாமைத்துவ செயலமர்வுபிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது வளவாளர்களாக முதன்மை பயிற்றுவிப்பாளர் தங்கவேல் சக்திவேல், நிபுணத்துவ ஆலோசகர்  திருமதி சக்தீஸ்வரி சக்திவேல்  ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வினை நடாத்தியிருந்தனர்.

இந்த செயலமர்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 35 மகளீர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இச்செயலமர்வின் மூலம் தாம் சிறந்த ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பெற்றுக் கொண்டதாக இதன்போது கலந்து கொண்டிருந்த பெண்கள் தெரிவிதனர்.












SHARE

Author: verified_user

0 Comments: