21 Feb 2024

சிறிலங்கா அரசாங்கம் புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்குமுன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்.

SHARE

சிறிலங்கா அரசாங்கம் புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்குமுன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்குமுன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்என இலங்கையிலுள்ள மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான மையம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான குடும்பங்களின் அமைப்பு, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் ஆகிய நான்கு தன்னார்வ அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடக அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை(20.002.2024) வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைகளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு எனப்படும் இப்புதிய ஆணைக்குழு, உண்மையைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குறைந்தது 36 ஆணைக்குழுக்களைக்கொண்ட வரிசையில் புதிதாக இணைந்துள்ளது. எனினும், நீதியும் பொறுப்புக்கூறலும் மழுப்பலானதாகவே தொடர்ந்தும் இருந்துவருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். நடவடிக்கை எடுக்கக்கோரி, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் துணிகர வீதிப்போராட்டங்களை ஆரம்பித்து இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே 240 இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இப்புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிராகரித்து 37 குடியியல் சமூக அமைப்புக்களும் 19 செயற்பாட்டாளர்களும் ஏற்கனவே வெவ்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. கடந்தகாலப் பொறிமுறைகளின் மோசமான தோல்வி, ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தத் தவறியமை, புதிய கட்டமைப்பிற்கான போதுமான அதிகாரமின்மை, சர்வதேச பிரதிநிதிகளை ஈடுபடுத்தாமை, பொருத்தமான நீதித்துறைப்

பொறிமுறையின்மை, மற்றும் முந்தைய ஆணைக்குழுக்களின் நீண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்து, நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் ஒரு, அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்க முடிந்தது

மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்காக அல்ல, இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது. சிறிலங்கா ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது. ஜனாதிபதியின் இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதே உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும். நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, படலந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும் தடுத்து வைப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லைஎ என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும்

இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணையத்தளத்தில் வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: