7 Feb 2024

போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்.

SHARE

போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசதிற்கு புதன்கிழமை(07.02.2024) காலைவேளையிலேயே 10 காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளதுஅப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூட்டமாக போரதீவுப் பற்றுப் பிரசேத்தின் மட்டக்களப்பு வாவியை அண்மித்ததாகவுள்ள பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளததால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

பெரியபோரதீவு, போவில்போரதீவு, பட்டாபுரம், பொறுகாமம், புன்னக்குளம், பழுகாமம், காந்திபுரம், உள்ளிட்ட பல கிராமங்களை அண்மித்தாக இவ்வாறு கூட்டமாக நிற்கும் காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்குதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

கிராமங்களை அண்மித்தாh காட்டு யானைகூட்டம் நிற்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் யானைகளைப் பகல் வேளையில் அப்புறப்படுத்த முடியாது, அதனை இரவு வேளையிலேயே வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கனத்தின் வெல்லாவெளி காரியாலய  அதிகாரிகள் தெரிவித்தனர். 

மிக நீண்ட காலமாகவிருந்து போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகளில் தொல்லைகளுக்கு அப்பகுதி  மக்கள் முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: