11 Feb 2024

கடந்த அனர்த்தத்தில் வாழ்வாதாரம் பாதிப்புற்ற மீனவ குடும்பங்களுக்கு 8 இலெட்சம் ரூபா உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

கடந்த அனர்த்தத்தில் வாழ்வாதாரம் பாதிப்புற்ற மீனவ குடும்பங்களுக்கு 8 இலெட்சம் ரூபா உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களக்களப்பு மாவட்டத்தில் கடந்த அனர்த்த காலங்களின்போது வாழ்வாதாரம் பாதிப்புற்ற கடற்றொழிலில் மீனவ குடும்பங்களுக்கு 8 லட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஜே.ஜே.முரளிதரன் அவர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை (11.02.2024) வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நகர  இணைப்பாளர் அப்துல் லத்தீப் அவர்களின் ஒருங்கிணைப்பில்  8 லட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி  வைக்கப்பட்டன.

இதன்போது அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் மீனவர்கள் கையளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட மீனவ சங்கத் தலைவர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட கடற்தொழிலில் திணைக்கள உயர் அதிகாரிகள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், திராய்மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பயனாளிகள்  என பலரும் இப் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது 350 பயனாளிகளுக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.













SHARE

Author: verified_user

0 Comments: