16 Jan 2024

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்பாரிய விபத்து ஒருவர் மரணம் மேலும் மூவர் பலத்த காயம்.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்பாரிய விபத்து ஒருவர் மரணம் மேலும் மூவர் பலத்த காயம்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் செவ்வாய்கிழமை(16.01.2024) மலை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்விகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மேதியுள்ளன.

இவ்விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றுமு; எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளாக வாகனங்களையும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.












SHARE

Author: verified_user

0 Comments: