18 Dec 2023

மட்டக்களப்பில் தொடர் மழை தாழ்நிலங்கள் வெள்ளத்தில்.

SHARE

மட்டக்களப்பில் தொடர் மழை தாழ்நிலங்கள் வெள்ளத்தில்.

வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது பெய்துவருகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக மழைபெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இது இவ்வாறு இருக்க உரிய வடிகான் வசதிவாய்ப்புக்கள் இன்மையால் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் உட்பகுந்துள்ளமையால் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்திலுள்ள வெல்லாவெளிக்குளம், கோவில்போரதிவுக்குளம். பெரியபோரதீவுக்குளம், பழுகாமத்திலுள்ள குளங்கள், மகிழூர், குருமண்வெளி. குருக்கள்மடம், களுவாஞ்சிகுடி, கதாவளை, உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ளன.

அதுபோன்று பெரிய குளங்களில் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாயர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நவகிரிக்கு குளத்தின் நீர்மட்டம் 31அடி அக்குளத்தில் 2 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 3 அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33அடி 3அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 11அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 1அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 9அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 7அடி, வெலிக்காக் கண்டிய குளத்தின் நீர்மட்டம் 12அடி 10 அங்குலம், புணாணை அணைக்கட்டில் நீர்மட்டம 5அடி 5அங்குலமாகவும் உயர்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பானசப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் 2023.12.18 ஆம் திகதி காலை 6 மணிவரையிலிருந்து முற்பகல் 11.30 மணிவலையில் 24.6 மில்லி மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அதிகாரி சு.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
















SHARE

Author: verified_user

0 Comments: