26 Dec 2023

சுனாமி பேபி அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தினார்.

SHARE

சுனாமி பேபி அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தினார். 

சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

அபிலாஷை அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டு வரப்படுகின்றது. பின்னர் மரபணுப்பணு பரிசோதனை மூலம் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

 தற்போது அந்த அபிலாஷிக்கு தற்போது 19 வயது. அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபில் இன்று பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் தாம் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துவதாகவும், இம்முறை கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையை எழுத்தவுள்ளதாகவும், பின்னர் தனது உயர் கல்வியை வெளிநாட்டில் தொடர்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் இதன்போது அபிலாஷ் தெரிவித்தார்.












 

SHARE

Author: verified_user

0 Comments: