22 Sept 2023

மட்டு போதனா வைத்தியசாலைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியாக த.தவக்குமார் நிரந்தர நியமனம்.

SHARE

மட்டு போதனா வைத்தியசாலைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியாக த.தவக்குமார் நிரந்தர நியமனம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக மண்டூர் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தவக்குமார் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் முன்நிலையில் வெள்ளிக்கிழமை (22.09.2023)  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் கடந்த நான்கு வருடங்களாக வெல்லாவெளி மற்றும் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, களுவாஞ்சிகுடி, பொலிஸ் பிரிவுகளின் திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றி வந்த நிலையில் அண்மையில்  நீதி அமைச்சில் நடைபெற்ற நேர்முக தேர்வில் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுளார்.

இவர் தனது ஆரம்ப,உயர்தர கல்வியை மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயம் மற்றும் மண்டூர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்றுள்ளார் மண்டூர் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புக் குழு கிராம அபிவிருத்திச்சங்கம், பிரதேச மட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியதகவும் சமய சமூக சேவைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது.



 

SHARE

Author: verified_user

0 Comments: