21 Sept 2023

விவசாய உபகரணங்கள், மற்றும் உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகள் விநியோகம்.

SHARE

விவசாய உபகரணங்கள், மற்றும்  உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகள்  விநியோகம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  விவசாய உபகரணங்கள் மற்றும் உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகளை   வழங்கும் நிகழ்வு  பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம்  தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (20.09.2023) இடம்பெற்றது.

மாவட்ட செயலாளர் திருமதி .கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஒரு தொகுதி  விவசாய உபகரணங்கள் மற்றும் உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகள் என்பன விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலகத்தின் சகல கிராம சேவகர்  பிரிவுகளிலிருந்து  தெரிவுசெய்யப்பட்ட 77 பயனாளிகளிடம் புசிட்டாவோ இன முளை திறன் பயற்றை உற்பத்திக்கான ஒரு கிலோ எடை விதைகளும், நீர்க்குழாய்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல், மாவட்ட விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் ரி. தனிநாயகம்,.விவசாய போதனாசிரியர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: