மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 141 வது ஆண்டு நிறைவு விழா.
இதனை முன்னிட்டு புதன்கிழமை(27.09.2023) வித்தியாலய அதிபர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இதன்போது பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்று நடைபவனியும் மட்டக்களப்பு குடியிருப்பு பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நடைபவனி செங்கலடி பிரதான வீதி வரைக்கும் சென்று மீண்டும் மட்டக்களப்பு குடியிருப்பு பிரதான வீதி ஊடாக பாடசாலையை வந்தடைந்து.
இதன்போது சுவாமி விலானந்தர், சுவாமி விவேகானந்தர், உள்ளிட்ட பெரியார்களின் புகப்படங்கள், மற்றும், வித்தியாலயம் இதுவரையில் பெறப்பட்ட வெற்றிக் கேடயங்களையும் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட ஊர்த்திகளும் இந்கழ்வை அலங்கரித்தோடு, மாவர்கள் மற்றும் பழைய மாவணர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கலை, கலாசார நிகழ்வுகளுடன், ஆடல் பாடல்களோடு நடை பவனியை அலங்கரித்தமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment