21 Jul 2023

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறு கோரிக்கை முன்வைத்து – ஆர்ப்பாட்டம்.

SHARE

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறு கோரிக்கை முன்வைத்துஆர்ப்பாட்டம்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கை முன்வைத்து வியாழக்கிழமை(20.07.2023) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து பேரணியாக வருகை தந்த மாணவர்கள், தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய பதாகைளை ஏந்தியவாறு கோசமட்டு பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு முன்பாக உள்ள ஒரு வழி போக்குவரத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இருவழிப் போக்குவரத்து தடைப்பட்டு, ஒருவழிப் போக்குவரத்து இடம் பெற்றது. ஏறாவூர் போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்

குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேலாக  நடைபெற்றதுஅதிகளவான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்கள் குரல் கொடுக்கையில் நிருவாகிகள் மௌனத்தில், 2023 எஸ்.எல்.யு.ஜி கிழக்கில் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள், களவாடிய பணத்தைக் கொடு, நிர்வாகிகளே விளையாட்டுத் துறைசார் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குங்கள், விளையாட்டுத்துறை பாதாழத்தினுள், நிர்வாகிகள் ஆழ்ந்த உறக்கத்தில், உள்ளிட்ட வாசகங்கள் தமிழிலும், சிங்களத்திலும், எழுத்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளை ஏந்தியவாறு மாணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: