15 Mar 2023

கற்சேனை அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் எட்டாவது மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம்.

SHARE


கற்சேனை அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் எட்டாவது மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம்.சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின்  நலன் கருதி மாதந்தோறும் நடைபெற்றுவரும்  மகிழ்ச்சிகர மாணவர் பயணத்  திட்டத்தின் எட்டாவது  பாடசாலைச் செயற்பாடு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருக்கும் கற்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதன் முதல்வர் திருவாளர் K.சிறிதரன்  தலைமையில் சிறந்த முறையில்  11/03/2023 அன்று இடம்பெற்றது.

சிவானந்த கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கல்வி மேம்பாட்டுக்கான  மாதாந்தச் செயற்பாடாக இடம்பெற்றுவரும் மகிழ்ச்சிகர மாணவர் பயணம்  பாடசாலைகள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளமை கண்கூடு. 

அதன்படி இம்மாதத்திற்கான திட்டத்தில் மட்/கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்குட்பட்ட சுமார் 40 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன. 

மாணவர்களின் மனவெழுச்சியை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள், சமூக மேம்பாட்டிற்கான ஆயுதமாக கல்வியை அடிப்படையாக்குதல், மாணவப் பருவத்தில் சிறந்த தூரநோக்கினை மையமாக வைத்து சுய திட்டமிடலை மேற்கொள்ளல் முதலான ஆழமான கருத்துக்கள் நடைமுறை உதாரணங்கள் மூலம் சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவை வளவாளர்களால் நிகழ்த்தப்பட்டன. 

மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி தவராஜா சுஹாஜனனின்  பூரண நிதி அனுசரணையில்  மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் எட்டாவது செயற்பாடு பாடசாலையின் அதிபர் திருவாளர் K. சிறிதரன் தலைமையில் மிகவும் திறம்பட நடைபெற்றது. 

மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தினை   பேரவையின் உறுப்பினரான  திருவாளர் அ.சித்தாத்தன்

சிறந்த முறையில் திட்டமிட்டு ஒழுங்கமைப்புகளைச் செய்திருந்தார். பாடசாலையின் பிரதி அதிபரும் பேரவை உறுப்பினருமான திருவாளர் இளங்கீரன் பாடசாலை சார்பாக ஒருங்கிணைப்பினைத் திறம்படச் செய்திருந்தார்.

பேரவையின் வளவாளர்களால் மாணவர்களுக்கேற்ற மனவெழுச்சிக் கருத்துக்களும் பெற்றோர்களுக்கேற்ற வழிகாட்டற் கருத்துக்களும்  சுவாரஸ்யமாகவும் உரையாடல்களாகவும் கூறப்பட்டன.

பாடசாலை அதிபர்,  பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள்  அனைவராலும்  மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன. 

திட்ட இணைப்பாளர் திருவாளர் அ.சித்தாத்தனின் நன்றியுரையுடன் பாடசாலைகளுக்கான எட்டாவது திட்டம் இனிதே நிறைவுற்றது.

சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் ஒன்பதாவது செயற்பாடு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்/மாவடி முன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  சித்திரை மாதம்  29/04/2023) சனிக்கிழமை அன்று இடம் பெறும்.














SHARE

Author: verified_user

0 Comments: