களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீற்தோற்சவம்.
கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீற்தோற்சவம் வியாழக்கிழமை(11) காலை ஆலய முற்றலில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய அவ்வாலயத்தின் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா இடம்பெற்றன. புதன்கிழமை(10) இரவு திருவேட்டைத்திருவிழா இடம்பெற்றத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை கலை மூல மூர்த்தியாகிய முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சிவன் உடன்உறை பார்வதி சமேதராய் இடபவாகனத்திலும், உள்வீதி, வெளி வீதி வலம் வந்து, வியாழக்கிழமை காலையில் சுபமுகுர்த்த வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இவ்வருடத்திற்கான திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment