28 Jan 2022

நிலக்கடலை அறுவடையும் கூட்டடெரு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வும்.

SHARE

நிலக்கடலை அறுவடையும் கூட்டடெரு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவுக்குபட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்தில்; நிலக்கடலை அறுவடையும் கூட்டடெரு உற்பத்தி தொடர்பான நிகழ்வும் வியாழக்கிழமை(27) நடைபெற்றது.

அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் .பேரின்பராசா, பழுகாமம் பிரதேச இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் ஆர்.டப்ளியு.லியனாராச்சி,  மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ரி.மேகராசா, மறு பயிர் பாட விதான உத்தியோகஸ்த்தர் என்.லட்சுமன், மற்றும் விவசாய போதனாசிரியர்கள், பாடசிதான உத்தியோகஸ்த்தர்கள், விவசாயிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்களின் பசுமை விவசாய செற்பாட்டுத் திட்டத்திற்கiமைய இதன்போது கலந்து கொண்டிருந்த விவசாயத்திணைக்கள அதிகாரிகளினால்  கூட்டெரு உற்பத்தி தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு, அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருந்த நிலக்கடலையும் அறுவடை செய்யப்பட்டன.  


























                                                                                    

SHARE

Author: verified_user

0 Comments: