வழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
கொவிட் - 19 தாக்கத்தால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் தினமும் உழைத்து தத்தமது குடும்பங்களைக் பாதுகாத்துவருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவட்டைப் பகுதிக்கு புதன்கிழமை(29) விஜயம் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பகுதியிலுள்ள 40 முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அரிசி, பருப்பு, கருவாடு, உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களே இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment