18 Jun 2021

நடமாட்டத்தடையால் முடங்கியுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

நடமாட்டத்தடையால் முடங்கியுள்ள  மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

கொவிட் - 19 காரணமாக அமுலிலுள்ள நடமாட்டத் தடை காரணமாக அன்றாடம் நாட்கூலி வேலைசெய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேத்தாதீவு கிராமத்தின் குடியிருப்பு, களுவாஞ்சிகுடி கிராமத்தின் சூரியபுரம், உள்ளிட்ட பகுதிகளில் நாட் கூலி வேலை செய்யும் 300 குடும்பங்களுக்கு

வெள்ளிக்கிழமை(18) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சமூக சேவையாளர், மே.வினோராஜ் அவர்களின் சொந்த நிதியில் அரிசி, உப்பு என உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

மக்கள் இவ்வாறு அவ்வப்போத இன்னலுறும்போது எமது நிலமை அறிந்து தாமாக முன்வந்து மனமுவந்த காலடிக்கே கொண்டுவந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்களுக்கு அப்பகுதி மக்கள நன்றிளைத் தெரிவித்துள்ளனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: