மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கொரோனா தொற்று நீக்க வேண்டி விசேட பூஜை வழிபாடு.
பிரமதர் மஹிந்த ராஜ்பக்ஸ அவர்களின் ஏற்ப எண்ணக்கருவிற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினுடைய இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக
இலங்கை உட்பட உலக நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் - 19 எனப்படும் கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் எனும் நோக்குடன் மக்கள் தங்கள் தங்கள் மத அனுஸ்டானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொவிட் தொற்று பரவல் நீங்கி சுபீட்சமான வாழ்வு மலரவும் உலக மக்களின் நன்மையையும் இலங்கை மக்களின் நன்மையையும் வேண்டி சனிக்கிழமை(08) விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ.சண்முக மயூரவதன குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடு மாலை 5.46 மணியளவில் நடைபெற்றது.
இதன் போது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment