புதிய இராஜாங்க அமைச்சு பதவியை பொறுப்பேற்றார் சதாசிவம் வியாழேந்திரன்.
தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்த சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் செவ்வாய்க்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார்.
வறிய மக்களுக்கு சேவையாற்ற கூடியவாறான அமைச்சு பதவியொன்றினை தனக்கு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அரசாங்கத்திடம் கோரியிருந்த நிலையில் புதிய அமைச்சிற்கான இராஜாங்க அமைச்சராக செவ்வாய்கிழமை ஜனாதிபதியால் நியக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment