மட்டக்களப்பில்
நண்பகல்
12 மணிவரை
40வீதம்
வாக்களிப்பு
இடம்பெற்றுள்ளதாக
அரசாங்க
அதிபர்
கலாமதி
பத்மராஜா
தெரிவிப்பு.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் கல்குடா தேர்தல் தொகுதியில் 42 வீதமான வாக்குகளும், மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் 40 வீதமான வாக்குகளும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 38 வீதமான வாக்குகளுமாக மாவட்டம் முளுவதும் 40 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா மாவட்ட உடகப் தகவல் தெரிவித்தார்.
மேலும் இதுவரையில் எவ்விதமான அசம்பாவிதங்களும் இம்மாவட்டத்தில் இடம்பெற்றதாக பதிவாகவில்லையெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment