21 Apr 2020

மட்டக்களப்பில் அரச சேவைகள் வழமைக்குத் திரும்பியதையடுத்து அரச அலுவலகங்களில் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை

SHARE
மட்டக்களப்பில் அரச சேவைகள் வழமைக்குத் திரும்பியதையடுத்து அரச அலுவலகங்களில் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து அரச சேவைகள் வழமைக்குத் திரும்பியிருப்பதால் அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவலகங்களில் தொடர்ச்சியாக தொற்று நீக்கி விசிரல் நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. 

இதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலம் மற்றும் பிரதேச செயலகங்களில் இத் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த தொற்று நீக்கி விசிறல் மூலம் பொதுச் சேவைகளுக்காக சமுகமளிக்கும் பொது மக்களுடாக கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்படுவதுடன் அரச பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்தத்திட்டத்திற்கமைவாக இன்று (21) மாலை எக்சன் யுனிடி லங்கா தொண்டார்வு நிறுவனத்தின் அனுசரணையில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள சகல அலுவலகங்களிலும் தொற்று நீக்கி விசிறல் இடம்பெற்றது. 

இத்தொற்று நீக்கள் நடவடிக்கைகள் எக்சன் யுனிடி லங்கா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேனாட் பிரகாஸ் தலைமையிலான கே. சதீஸ்குமார், ஆர். சரத் சந்திரன் அடங்கலான குழுவினர் ஈடுபட்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு நகரிலுள்ள பொது இடங்கள் மற்றும் சனக்கூட்டம் அதிகமாகக் கூடும் வரத்தக நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்றாமலிருக்க மட்டக்களப்பு மாநகரசபையினாலும் இத்தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: