மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில் சந்தியில் இருந்து வாவிக்கரை வீதி-01 சுற்றுவட்டம் வரையான 800 மீற்றர் நீளமான பகுதி எதிர்வரும் மாதம் 05ஆம் திகதியில் இருந்து (05.03.2020) வாகனப் போக்குவரத்திற்கு ஒருவழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும் இதர பயணிகளுக்குமாக வீதியின் இருபக்க தொடக்க முகப்பிலும் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment