ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம பாதுகாப்பு குழுக்களை அமைக்கும் செயற் திட்டம் முன்னெடுப்பு.
ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சு உள்ளக நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம பாதுகாப்பு குழுக்களை அமைக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிராம பாதுகாப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டின் கடந்த உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு பின்பு சகல கிராமங் களிலும் பாதுகாப்பை தேசிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சு இணைந்ததாக கிராம பாதுகாப்பு சங்கங்களை அமைத்து மக்களின் பாதுகாப்பையும் மற்றும் சுகாதாரம் விவசாயம் தேசிய போதைபொருள் ஒழிப்பு செயற்பாட்டினையம் முன்னெடுக்கும் முகமாக மாவட்டத்திலுள்ள 1036 கிராம சேவக பிரிவுகளிலும் இச்செயற்றிட்டம் முன்னெடுக் கப்படவுள்ளது. இங்கு இவ்அமைப்பின் குறிக்கோள் கட்டமைப்பு சட்ட வழிகாட்டல் கடைபிடிக்கவேண்டிய விடயங்கள் பாதுகாப்பு அறிக்கையிடல் போன்ற செயற்றிட்டங்கள் பற்றி கவனத்திற்கொள்ளப்பட்டன.
இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராம பாதுகாப்பு செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.டி.கமல் பத்மஸ்ரீ கலந்து கொண்டு இச் செயற்றிட்டத்தின் முக்கியத்துவம் பற்றி கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளித்தார். வியாழக்கிழமை மாவட்டத்;திலுள்ள 7 பிரதேச செயலகங்களிலுள்ள 131 கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து பிரதேச செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் கிராம சேவகர்கள் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாதுகாப்பு படையினர் சிவில் சமுக பிரதிநிதிகள் இவ்விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேநேரம் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள கிராம சேவகர்களுக்கான பயிற்சி நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment