மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு.
அரசின் வாக்குறுதிகளுக்கு அமைய பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாடாளாவிய ரீதியில்; நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேசசெயலக டேபா மண்டபத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் உள்வாரி 203 பட்டதாரிகளுக்கு நியமனம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அமீர்அலி கலந்துகொண்டார். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும். அரசாங்க உயர் அதிகாரிகள் பிரதேச தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் பட்டதாரிகள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் மேற்படி பட்டதாரிகளுக்கு ஒரு வருட கால பயிற்சிகாகவும் இந்நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
0 Comments:
Post a Comment