மட்டக்களப்பில்; பிரபல உணவு விடுதியின் களஞ்சியசாலையில் தீவிபத்து.
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய வீதியில் உள்ள பிரபல உணவு விடுதியின் களஞ்சியசாலைக்கான தனியான அறையொன்றில் புதன்கிழமை (10) ஏற்பட்ட தீ விபத்தினால் அவ்வறையில் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
குறித்த பிரபல உணவகத்தினரால் தனியான அறையில் கார்போர்ட் மட்டை சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவ்வறையில் ஏற்பட்ட தீவிபத்தினால் அறையில் வைக்கப்பட்ட கார்போட்மட்டை முற்றாக எரிந்துள்ளது. இவ்விபத்தினால் இங்கு கடமையையாற்றிய எவருக்கும் காயங்களோ அல்லது அனர்த்தங்களோ ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இதனால் அவ்வுணவக விடுதியின் வளாகத்தில் பாரிய புகைமண்டலமாக காணப்பட்டது. இத்தீ விபத்து சம்பந்தமாக மட்டக்களப்பு மாநகரசபைக்கும், மட்டக்களப்பு தலைமைப் பொலிசாருக்கும் முதலில் தீப்பற்றிக்கொண்ட செய்தி அறிவிக்கப்பட்டன. மட்டக்களப்பு தீயணைப்பு படை பிரிவினரும், பொலிசார், முப்படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்குரிய முயற்ச்சிகளை மேற்கொண்டு சரியாக ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டயஸ் தீகாவத்துர தெரிவித்தார்.
இவ்விடயமாக மட்டக்களப்பு இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் பிரிவினர் இவ்விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை விசாரணை மேற்கொண்டு வருவதோடு பொலிசாரும் மேலதிக தகவல்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 Comments:
Post a Comment