மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாகிர் மௌலானா, கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, மட்டக்களப்பு மாநகர சபை பிரதி மேயர் சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் மற்றும் மட்டக்காப்பு பொலிஸ் பெறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் ஆரையம்பதி பிரதேச செயலம்13 பதக்கங்களைப் பெற்று 3 ஆம் இடத்தையும், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் 17 பதக்கங்களைப் பெற்று 2 ஆம் இடத்தினையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 44 பதக்கங்களைப் பெற்று 1 ஆம் இடத்தினையும் பெற்று கொண்டது.
இதன் போது ஏனைய திணைக்களங்களுக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அலுவலகங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment