தற்கொலைக்குண்டு தாரியின் உடலை மட்-புதுநகர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடந்த உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதி மன்ற உத்தரவின் பேரில் இறந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை அப்பகுதியினைச் சேர்ந்த கிராம மக்கள் ஆலையடிச்சோலை மயான வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழரது புனித மயானத்தில் ஐஎஸ்.ஐஎஸ், தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் எதிர்;ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்தவர்கள் ஏந்தியிருந்தனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் இவ்வார்ப்படத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இறுதியின் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிசார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கினர்.
0 Comments:
Post a Comment