மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பாலையடிவட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள பொதுச்சந்தையை மீண்டும் வியாழக்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பாலையடிவட்டையில் கடந்த 1990 ஆம் ஆண்டு காலத்தில் பாரியதொரு பொதுச்சந்தை காணப்பட்டது அக்காலத்தில் அச்சந்தையில் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களும் ஒன்றுகூடி பல வியாபாரங்களை மேற்கொண்டு வந்த நிலையில் அக்காலத்தில் ஏற்பட்ட யுத்த யூழல் காரணமாக அந்த சந்தைத் தொகுதி வியாபாரம் விடுபட்டு அதற்குரிய கட்டடங்களும் அழிக்கப்பட்டன.
இதனால் அப்பகுதி மக்களின் வியாபார கேந்திர நிலையமாகக் காணப்பட்ட இல்லாமல் போனதுடன் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த உறவுகளும் விரிசலடைந்தன.
பின்னர் பொதுச்சந்தைக்குரிய அந்தக் காணியில் இலங்கை இராணுவம் தற்போதுவரைக் நிலை கொண்டிருந்து வருகின்றனர். இந்நிலையில் அக்காணியிலிருந்து இராணுவம் வெளியேறாத நிலையில் அக்காணிக்கு சற்று அண்மையிலுள்ள காணியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முயற்சியினால் புதிதாக சந்தைத் தொகுதி கட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டு சிலகாலம் மாத்திரமே அதில் வர்த்தக நடிவடிக்கைகள் இடம்பெற்றன. பின்னர் மீண்டும் அந்த சந்தை வியாபாரமும் இல்லாமல் போய்விட்டது.
போரதீவுப்பற்றுப் பிரதேச சiபியின் கீழ் உள்ள இந்த பொதுச்சந்தைத் தொகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து அப்பகுதி மக்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தற்போது போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, மற்றும், பிரதேச சபைத் தவிசாளர் யோ.ரஜனி உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் முன்நெடுத்துள்ளனர்.
அதற்கிணங்க வியாழக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு மீண்டும் பாலையடிவட்டை பொதுச்சந்தை உத்தியோகபூர்வமாக ஈரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரச அதிகாரிகள், பிரதேச மட்ட அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment