மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சமூக நலன்சார் சேவையாக முன்னெடுக்கப்படும் விவேகா வாழ்க்கைத் திட்டமிடல் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவின் மிக முக்கியமான செயற்பாடாக இம் முறை கல்வி பொதுத் தர உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக் கழகங்கள் செல்லவுள்ள சாதனையாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களை “பல்கலைக்கழக கல்வி முறைக்கான ஆயத்தப்படுத்துகை” என்ற இலவச 3 நாள் பயிற்சிப் பட்டறையினை நடாத்தவுள்ளனர்.
இதில் கற்றலுக்கு தேவையான பிரயோக ஆங்கிலம், மென்திறன் விருத்திப் பயிற்சிகள், தலைமைத்துவ விருத்தி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பகுதி, பகுதியாக இப்பயிற்சி நடைபெற இருப்பதால் பல்பலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும், ஆனாலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும், கிராமங்களில் இருந்த தெரிவான மாணவர்களிற்கே முன்னுரிமை வழங்கப்படும்.
ஆனாலும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினரே பயிற்சிப் பட்டறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்ப முடிவுத் திகதி 15.06.2018.
கல்லூரிக்கு வருகை தந்தோ, கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டோ அல்லது இலத்திரனியல் விண்ணப்பம் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும். தொடர்புக்கு : 0654929509, 0759653638, 0777105570 என விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் திங்கட் கிழமை (04) தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment