6 May 2018

கொல்லநுலை பாடசாலையில் சித்திரைப்புத்தாண்டு

SHARE


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள்  புதன்கிழமை இடம்பெற்றன.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இறைவழிபாடு,  சிற்றூண்டிகள் வழங்கல், கைவிசேடம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் தரம் 1, 2 மாணவர்கள் பங்கேற்றதுடன், யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரும் பங்கேற்றனர்.














SHARE

Author: verified_user

0 Comments: