மல்வத்த பீடத்தின் மாஹா நாயக தேரருடன் வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அவர்களுடன் நாரா.அருண்காந்த் அவசர சந்திப்பு.
மல்வத்து பீடாதிபதி வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கும், இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை கண்டி மல்வத்து பீடத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில்… மலையகம், தெற்கு, மற்றும் கிழக்கில் அமைதியான சூழலை தமிழ் மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர். தற்போதைய அசாதாரண சூழலைப் பயன்படுத்தி சில குழுக்கள் மலையகத்திலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை ஏவி திசைதிருப்ப முயற்சிசெய்வதாக தகவல்கள் வந்தது. நாம் உடனடியாக இராணுவ அதிகாரிகள் பொலிஸ்மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோரை தொடர்புகொண்டு அனைத்துவிதமான சமூக விரோத நடவடிக்கைகளையும் முறியடித்துள்ளோம். இதுதொடர்பாக தங்களை தெளிவு படுத்தவே இன்று வருகைதந்தோம் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய மாநாயக தேரர் கூறும்போது இந்த நாட்டில் எல்லா இன மக்களும் அமைதியாக வாழ வேண்டும். ஒருசிலர் செய்யும் தீய செயற்பாடுகள் நாட்டையே சீரழித்து வருகின்றது. எனினும் கிழக்கில் தமிழ் மக்கள் பொறுப்புடன் நடந்துகொண்டதாக கூறினீர்கள். அவர்களுக்கு என் சார்பில் வாழ்த்துக்கள். இனிவருங்காலங்களிலும் இது தொடர வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment