மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கிராமத்தில் கடந்த 18.10.2017 அன்று இடம்பெற்ற இளம் தாய் மற்றும் மகன் இரட்டைப் படுகொலையாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக வேண்டாம்” எனக்கோரி பிரதேச கிராமக்கள் திங்கட்கிழமை 13.11.2017 ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்திலும் கண்டனப் பேரணியிலும் சவுக்கடிஇ ஆறுமுகத்தான்குடியிருப்புஇ மயிலம்பாவெளிஇ தன்னாமுனை உள்ளிட்ட அயற் கிராமங்களிலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் “சவுக்கடி இளம் தாய் மற்றும் இரட்டைப் படுகொலையில் பொலிஸாரும்இ விஷேட புலனாய்வு பிரிவினரும் கொலைகாரர்களை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தார்கள். உணவு கூட உண்ணாமல் அவர்களது பணியை மிகவும் மிகவும் சிறப்பாக செய்தார்கள்.
ஆனால் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் ஒரு சில சட்டத்தரணிகள் முயல்வது மிகவும் கவலைக்குரியதே.
கொலைகாரர்களுக்குச் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாதுஇ அதேவேளை கொலைவயாளிகளுக்கு அதிகூடிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஈவிரக்கமற்ற படுகொலைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியருகே ஆறுமுகத்தான்குடியிருப்புப் பகுதியில் அமைதியான முறையில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின்போது பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இப்படுகொலையின் பிரதான இரு சந்தேக நபர்கள் படுகொலை இடம்பெற்ற வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களடன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment