இந்த நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமானது என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 24.09.2017 கிரான்புல்சேனையில் இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பிரதேச விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன், இதுவரை காலமும், கைகளினால் மனித உழைப்பின் மூலம் மண்ணைக் கொண்டு இந்த அணைக்கட்டை எழுப்பி பிரதேச விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு வந்திருந்தனர்.
அது பெரும் பிரயாசைக்கு மத்தியில் சிரமங்களுடன் இடம்பெற்று வந்தது.
ஆனால் அதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைத்தாற் போல தற்போது இந்த இணை பாரிய நிதிச் செலவில் உறுதியாகக் கட்டப்படவுள்ளதால் இன்னும் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என அறிகின்றேன்.
இவ்வாறே நாட்டின் பல இடங்களில் ஜனாதிபதி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோரின் தலைமையில் விவசாய மறுசீரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் இந்த கிரான்புல் அணைக்கட்டை அண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருடைய முயற்சியின் காரணமாக இந்தக் காரியம் இடம்பெறுகின்றது.
விவசாய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் புதிய திட்டங்கள் இன்னுமின்னும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பிரதேச விவசாயிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற வசதியை மென்மேலும் முழுமையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்திலும் வாழ்விலும் முன்னேற்றம் காண வேண்டும்.
அதேபேன்று எதிர்வருகின்ற சந்ததிகளும் சுகமாக, சுதந்திரமாக சமாதானமாக மதிப்புடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பதே வேணவாவாகும்” என்றார்.
0 Comments:
Post a Comment