27 Jun 2017

கடந்த காலங்களில் நடைபெற்ற பல சம்பவங்களிலிருந்து நாம் வெற்றிகளையும் தோல்விகளையும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சிரேஷ‪;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்ஹ

SHARE
கடந்த காலங்களில் நடைபெற்ற பல சம்பவங்களிலிருந்து நாம் வெற்றிகளையும் தோல்விகளையும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சிரேஷ‪;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்ஹ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொக்கி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான ஒலிம்பிக் ஹொக்கி விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (24.06.2017) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ‪;ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ‪;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்ஹ தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல சம்பவங்களிலிருந்து நாம் வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்து வந்திருக்கின்றோம்.

இவ்வாறு வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்கின்ற மனப் பக்குவம் இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வர வேண்டும்.

விளையாட்டின் இறுதியில் வெற்றி தோல்வியினை ஏற்றுக்கொள்ளாத பக்குவத்துடன் சென்றால் அந்த வீரர் அல்லது அந்த அணி விளையாடுவதற்குரிய தகுதியை இழந்துவிட்டதாகவே கருத வேண்டும்.
விளையாட்டின்போது யாரும் யாருக்கும் சமமானவர்கள் என்பதனை புரிந்துகொண்டு களமாடினால் அத்தகையவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்பதுதான் நிஜவாழ்வில் யதார்த்தமாகும்”என்றார்.

போட்டியின் ஆரம்ப நிகழ்வில், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜே. ஜாகொட ஆராச்சி, இலங்கை விமானப்படை விங் கொமாண்டர் வீ.ஜி.ஜி.வி. பியசிறி, மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி எஸ்.பி. நிவுன்ஹெல, மட்டக்களப்பு மாவட்ட கடற்படை தளபதி ஜி.ஆர்.ஜி. குணரத்ன, சமூக பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம், 
வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் பிரதித் தலைவர் பி. விஸ்வநாதன், கிழக்கு மாகாண பொலிஸ் சேவை ஆணைக்குழு பணிப்பாளர் ஏ. ரவீந்திரன் ஆகியோரும் விளையாட்டுப் பிரியர்களும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: