30 Jun 2017

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறையை மத்திய அரசு புறக்கணித்து வருகின்றதா? மாகாண சுகாதார அமைச்சர் ஆதங்கம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையை மத்தியரசு புறக்கணித்து வருகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ எல் முஹம்மட் நஸீர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.


மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளையும் அங்கு எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் கேட்டறியும் விசேட கலந்துரையாடல் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு ஏற்பாட்டில் வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 29.06.2017 இடம்பெற்றது.
அங்கு வைத்தியர்கள், தாதியர்கள், அலுவலர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது@

பெரியகல்லாறு வைத்தியசாலை தரம் குறைய விடவில்லை.
இது தொடர்பில் மக்கள் குழம்பத் தேவையில்லை பலம்பொருந்திய இவ்வையத்தியசாலையில் 03 முக்கிய பிரிவுகளில் ஆளணிப் பற்றாற்றாக்குறையினால் மூன்று முக்கிய பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
இதனை உடனடியாக திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இடமாற்றாங்களினால் ஏற்பட்ட இடப்பாற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள வெளியோயாளர் பிரிவுக்கான புதிய கட்டிடம் ஒன்றினை பெறுவதற்கான திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அது மிகவிரைவில் அமுல்படுத்தப்பட்டு புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக விரிவான ஆராய்வு எதிர்வரும் சில நாட்களுக்குள் எமது திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது.
இவ்வைத்தியசாலையில் மொத்தமாக 110 ஆளனிகள் இருந்தாலும் அதில் இன்னும் பலரை உள்வாங்குவதற்காக முகாமைத்துவப்பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே மத்தியரசு கிழக்கு மாகாண சுகாதாரத்துறையை தொடர்ந்தும் புறக்கணித்து வரும் நிலைப்பாடு உண்மையாக இருந்தால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் 110 வைத்தியர்கள் அவசர தேவையாகவுள்ளது.

கிழக்கு மாகாணம் முழுவதும் மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எமது சுகாதாரதுறையின் மூலம் அபிவிருத்தியையும் பல சிக்கல்களை அவிழ்த்து விடும் வேலைத் திட்டங்களையும் கடந்த 2 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றோம்.
விசேடமாக மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊடாக அவர்களுக்கு கீழ் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல திட்டங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்திவருகின்றது.

இவ்வாறு செயற்படகின்றபோது மத்தியரசின் சில திட்டங்களால் சில பிரச்சினைகளுக்கு எம்மால் சரியான தீர்வை வழங்க முடியாமல் உள்ளது.
குறிப்பாக இவ்வருடம்  ஆளணிப் பிரச்சினைகள், நிதிப் பிரச்சினைகளில் பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

கடந்த வருடம் 690 மில்லியன் ரூபாய் நிதி கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இவ்வருடம் 220 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டிருப்பதால் எமது மாகாணத்தில் இன்னும் அதிகமான தொடர் வேலைகளை செய்வதில் சிக்கல்கள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறைக்கு மத்தியரசு இம்முறை ஒதுக்கிய நிதிகள் போதாமையாகவே உள்ளது.

ஆளணி பற்றாக்குறையாக இருப்பது கிழக்கு மாகாணத்திற்கும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துள்ளியுள்ளது.

இது தொடர்பாக நாம் மத்தியரசுக்கு அறிவித்துள்ளோம் அதற்கான் நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும்.

வடமாகாண சபை போல் கிழக்கு மாகாண சபையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஒற்றுமையாக ஆட்சி செய்கின்றது.

எமது மாகாணத்தில் எவ்விட முரண்பாடுகள் இல்லாமல் மேற்கொள்வதற்காக நாம் அர்ப்பணிப்புடன் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் செயற்படுகின்றோம் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் இரு கட்சிகளும் பிரதான பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது.





SHARE

Author: verified_user

0 Comments: