ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் கடற்றொழில் நீரில் வள அபிவிருத்தி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினல் நிருமாணிக்கப்பட்ட செட்டை மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு தர்மபுரத்தில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் தலைவர் உப்புல் முகட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் நீரில் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர பிரதம அதிகதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மாகாணசபை பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, சிப்லி பாறுக், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கொடுவாமீன் வளர்ப்பில் ஈடுபடும் 97 மீனவர்களுக்கு தலா 1250000 ரூபா வீதமும், வீடு கட்டுவதற்கு 20 மீனவர்களுக்கு தலா 150000 ரூபா வீதமும், வீடு திருத்துவதற்கு 8 மீனவர்களுக்கு தலா 50000 ரூபா வீதமும், மலசலகூடம் கட்டுவதற்கு 6 மீனவர்களுக்கு தலா 150000 ரூபா வீதமும் வழங்கப்பட்டதோடு குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு மீனவருக்கு 50000 ரூபா பணமும் இதன்போது வழங்கப்பட்டமை குறப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment