25 Feb 2017

பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலையத்தின் இல்ல விளையாட்டு விழா

SHARE

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலையத்தின் இல்ல விளையாட்டு விழா அண்மையில் (17) மாலை பாடசாலையின் விளையாட்டுமைதானத்தில் நடைபெற்றது.
சுமார் 10 வருடங்களின் பின்னர் பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்தவிளையாட்டு விழா ஓர்க்கிட்,றோஸ், லோட்டஸ் என்ற மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்றன.
ஓர்க்கிட் இல்லம் 201 புள்ளிகளைபெற்று இந்தவருடத்திற்கான சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 197 புள்ளிகளை பெற்ற லோட்டஸ் இல்லம் இரண்டாம் இடத்தினையும் 190 புள்ளிகளுடன் றோஸ் இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை பிரதமஅதிதியாக கலந்துகொண்ட கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான எம்.எஸ்.அப்துல் ஜெலீல் வழங்கிவைத்தார். கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.டப்ளியு.ஜிஹானா முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், சமூர்த்தி முகாமையாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.முபீன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: