23 Feb 2017

எனக்காக ~ - நற்செய்தி பாடல்கள் வெளியீடு

SHARE
தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை  மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்றி அவர்களால் எழுதப்பட்ட எனக்காக  எனும் கிறிஸ்தவப் பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு
வெளியீடு எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெறும்  நிகழ்வில் இவ் இறுவட்டு வெளிவரவுள்ளது.
ஆன்மீக தேடல்கள் நிறைந்த காலகட்டமான தவக்காலத்தின் ஆரம்பத்திலேயே இந்திய இசைக்கு நிகரான இசையில் மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்றி அவர்களால் எழுதப்பட்ட எனக்காக  எனும் கிறிஸ்தவப் பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இதற்கு மட்டக்களப்பு மண்ணின் இளம் இசையமைப்பாளர் சஞ்ஜீத் லக்ஷ்மன் இசையமைத்துள்ளார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களின் குருக்கள், துறவியர்கள், பங்குமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: